edirum pudhirum vidaikaL


எதிரும் புதிரும் :விடைகள் குறுக்காக: 1.எந்த நேரமும் ஒரு புதிய உயிரைக் கொணரத் தயாராய் உள்ளவள் பின்னால் பிணி (2,2,4) நிறை மாத கர்பிணி 6.பாதி உரையில் சுக்காய் இணைந்தது கறிக்கு உதவும் (5)சு ரை க்காய் 7.சோக்கு நடுவே கொஞ்சம் பாறாங்கல் கலந்து சமை (4) கொஞ்சம் பாறாங்கல் = றா . சோறாக்கு ( அதென்ன சோக்கு ? அது joke ) 9.தலை கொண்ட வேல் வேல், இடை தந்த பழம் , முக்காலும் உந்தன் கஜ ராஜன் (2,4)தலை கொண்ட வேல் வேல்= வே, வே .இடை தந்த பழம் = ழ ராஜன்= வேந்தன் . வேழ வேந்தன் 12.ஊழ்தனை எதிர்கொள் (2) விதி ---தி வி 13.லம்போதரன் உட்கொண்ட மாதிரி (2) போல = மாதிரி 14.(ஆத்தாளின்) கோரம் தாங்குபவர் கோவம் விட்டுக் கலங்கின் அவர் பணம் போட்டவர் என உணர்க (6)கோரம் தாங்குபவர்- கோவம்=ர தாங்குபர் ~ பங்குதாரர் = பணம் போட்டவர் 15.அருமையாய் ஆடு வளர்த்து உள்ளே சாவுக்கா கொடுப்பது? (2)உள்ளே சாவுக்கா --காவு 16.எதிரும் புதிரும் ஒன்று சேர்ந்தது பாலம் (2)சேர்ந்தது--சேது =பாலம் நெடுக்காக: 1.அச்சச்சோ, நில்லாது (போகும்) ஆறு. அதில் தேடினால் கிடைக்கும் மதி(ய) உணவு (3,2)மதி(ய) உணவு = நிலா ச் சோறு 2.புளிமாங்காய் நறுக்கி வழங்கு. அதில் தோன்றும் கொற்றவை ஊறுகாய் (4,4)கொற்றவை = மாகாளி . மாகாளிக்கிழங்கு 3.வளர்த்த கடா சும்மா இருந்தால் சைதாப்பேட்டையில் வீசி எறி (3) கடாசு = வீசி எ றி 4.முன்பின் அணைக்கின் இடையில் மாறாது. தேடித்தேடி ஒன்று சேர்க்கிறான் (6)இணைக்கிறான் 5.முழு நிலாக் கடந்த மதி (2,2,3) தேய் பிறை நிலவு 8.பஞ்சாட்சரத்தில் அடங்கிய பெண்குரங்கு, ரதி தாங்கிய மரமோ? இது என்ன மாயமோ (5)மந்திரமோ 10.'(நான்) வித்தகர்' என்றால் உள்ளே விசயம் இருக்கு. சேர்க்க வேண்டாம் (3)தவிர் =சேர்க்க வேண்டாம் 11.விட்டு விட்டுப் பாடுபவர் ஒரு சாம்ராஜ்ஜியத்தை துவக்கியவர் (3)பாபர் 13.போது இருக்கு, காது இருக்கு ஆனால் நுழையாது (3)போகாது

Comments

Popular posts from this blog

811 muppaalarum

810 asaiva uNavu

807 poo maNakkum