saami padam

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்...........................................................

சாமி படம்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.கால் போனாலும் உலாவருவாள் பவானி (3)
3.மந்தாகினி கரையில் பனி நடுவே ஒளிமயமாய் பாண்டவருக்கு காட்சி தந்த சிவன் ஆலயம் (5)
6.மகரங்கள் கொண்டு மாமனை ஆள்பவள் (2)
8.உண்மையில் துவங்கி இடை அப்பனே, கந்தலில் முடியும் . பேச்சு மட்டும் அலங்காரம் (3,4)
10.பல அமெரிக்கர் சொல்லத் தயங்குவதை சொல்லிவிடும் குடி அரசர் (4,4)
12.முதலில் சிவலிங்கத்தை சுமப்பவனை இசை. இது தரம் பார்த்தல் (4)
14.புலி வயம்( சிக்கினும்) புரண்டு வரும்தோள் பலம் (2,2)
15.வீரம் அறத்துக்குப் புறம்பில்லை (3)

நெடுக்காக:
1.ஒரு பட்டாடை வாடட்டும். ஒட்டடை போகட்டும் . (கொஞ்சம் வைத்துக் கொண்டு) பகிர்ந்தளித்தல் (5)
2.மானிடரில் கவரிமான் அன்னவரும் எதிர்ப் படுவர் (2)
4.உயிரின்றி மலரின்றி ஆழ்ந்ததா பூங்கொடி? கலக்கத்தில் தேசிய துக்கமோ (4,2)
5.வாய் நாற்றம் மெய் விலக்க இப்படிச்சொல்லி மகிழ (3)
7.சாமி படத்தில் முதலில் சாத்திய (மலர்) போனால் அதிர்ந்த அடியார் அடியில் அமுங்கிடல் (நேரலாம்) (5)
9.பொலியாத புன்சிரிப்பில் தோன்றும் நகைப்பின் நாதமா?
10.குழி விழுந்த கன்னம்/ கண்களுக்கு மொட்டொடு பூக்கும் (பூவில் ) புதைந்த செல்லப் பெயர் (3)
11.மரமறுக்கும் கருவி தாங்கும் பய மாறியது மனதுக்கு இதம் (4)
12.முழுவட்டம் /360= ஒரு (2)
13.பாலில் விழுந்த பழ மொழி நாடு (2)
14 புற்றரவு உள்ளே வெளியே உள்ள (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum